Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்களுக்கு ஏற்றுமதி கருத்தரங்கம்

நவம்பர் 11, 2023 09:50

நாமக்கல்: நாமக்கல் S.M‌.N பவுல்டரி பார்ம்ஸ் மற்றும் சத்தியமூர்த்தி & கோ  இணைந்து நாமக்கல்  HDFC வங்கியில் பணியாற்றி இடமாறுதல் ஆகும் மேலாளர் டேனியல் மற்றும் சிந்தியா ஆகியோருக்கு பாராட்டு விழா, கோழிப்பண்ணையாளர்களுக்கு முட்டையில் மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்கம் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சனு குழும நிறுவனங்களின் தலைவர் வ.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார், பசுமை மா.தில்லை சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

SMN பவுல்டரி பார்ம்ஸ் மோகன் முன்னிலை வகித்தார். திவ்யா பவுல்டரி பார்ம்ஸ் காளியண்ணன், கிருஷ்ணா பவுல்டரி பார்ம்ஸ் முரளி மற்றும் ஹாங்காங் நாட்டில் இருந்து வருகை தந்த தொழிலதிபர் மற்றும் ஏற்றுமதியாளர் வேல் கண்ணன் ஆகியோர் HDFC வங்கி மேலாளருக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்துரை வழங்கி பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர்.

கருத்தரங்கில் அவர் பேசுகையில், நாமக்கல் வளர்ந்து வருகிற தொழில் நகரமாக விளங்குகிறது, தற்போதைய இளம் தொழில் முனைவோர்கள் கோழிப்பண்ணை சார்ந்த அனைத்து தொழில்களில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு வங்கிகள் பெரிதும் உதவுகிறது இதைப் பயன்படுத்தி பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம் என பேசினார்.

SMN பவுல்டரி பார்ம்ஸ் மேலாளர் நந்த கோபால் நன்றி கூறினார். இதில் கோழிப்பண்ணையாளர்கள், ஏற்றுமதி பவுல்டரி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் HDFC அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்